Wednesday, June 28, 2017

Image may contain: cloud and text

குடும்ப சூழ்நிலை, இனி வாழ்நாளை கழிக்க பென்சன் மட்டும் 
போதும் என்ற மனநிலையில், முழுமையான மனநிறைவோடு 
4-7-2017 முதல் விருப்ப ஒய்வில் சென்று, 38 ஆண்டுகால 

அலுவலகப் பணியை நிறைவு செய்யலாம் முடிவெடுத்து 
21-3-2017 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தேன்.


அன்று முதல் இன்றுவரை  என் மீது சங்க பேதமின்றி
பேரன்பு கொண்ட எண்ணற்ற தோழர்களும் தோழியர்களும்
 " இன்றுள்ள சூழ்நிலையில் " நான் விருப்ப ஓய்வில் செல்வது
உசிதமானது அல்ல என்றும், முழுமையான பணி நிறைவு
செய்த பிறகே பணி ஓய்வு பெற வேண்டும் என்றும் 
இயக்கப்பணியை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி
அன்புக் கட்டளை இட்டனர்.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற அனைத்து 
சீரமைக்கப்பட்ட கிளைக் கூட்டங்களிலும் அதே கருத்து 
மேலோங்கி வந்தது.

எனது வழிகாட்டிகள் தோழர்கள் மதிவாணன், மாலி 
ஆகியோரும் அதே கருத்தை கூறினர்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக எனது அருமைத் தோழர் 
தோழியரின் உணர்வுகளுக்கு இயைந்து வாழ்ந்த 
சுப்பராயன் எம்மாதிரம்.? !

ஆகவே எனது முடிவை மறுபரிசீலனை செய்து தள்ளி 
வைத்து  உள்ளேன்.

எனக்கு ஆக்கமும்  
 ஊக்கமும்   தரும் அன்பு நெஞ்சங்களுக்கு 
எப்படி கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை ?

நன்றி !! நெஞ்சுநிறை நன்றி !!





No comments:

Post a Comment